”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

கட்டிடக்கலை


சங்க கால கட்டிடங்கள் அழியதக்க செங்கல், மரம் முதலியவற்றால் அமைக்கப்பட்டவை எனலாம். பல்லவர்கள் காலத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய குடவரைக் கோயில்களின் மூலம், ஒரு புதிய வகை சிற்பம் மற்றும் கட்டிடக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் மலைப் பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன (எடுத்துக்காட்டு மாமல்லபுரதிலுள்ள மகிஷாசுர மண்டபம்).  பின் ரதம் போன்று செதுக்கப்பட்ட ஒற்றைக்கற்கோவில்களை அமைத்தனர். அதன் பின் செதுக்கப்பட்ட கற்பாறைகளை இணைத்து கற்கோயில்களை கட்டினர். எடுத்துக்காட்டாக மாமல்லபுர கடற்கரை கொயில்,காஞ்சி சைலாச நாதர் ஆலயம் வைகுந்த பெருமாள் ஆலயம். இக்கோயில்களிலுள்ள விமானங்கள் தனி சிறப்பு வாயிந்தவை. 

தஞ்சை பெரியக்கோவில்
பல்லவ கால கட்டிடக்கலை பிற்கால சோழர் காலத்தில் மேலும் விரிவு படுத்தப்பட்டது. சோழர்கள் காலத்தில் பிரம்மாண்டமான வானளாவிய கோயில்கள் கட்டப்பட்டன. பரந்துவிரிந்த வளாகங்கள், பாதுகாப்பான உட்புற சுற்றுசுவர், சிற்பவேலைப்பாடு மிக்க அழகிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள் (மகா மண்டபம், அர்த்த மண்டபம், நாத்தன மண்டபம், வாத்திய மண்டபம்) கருவறை, பெரிய விமானங்கள், தளங்கள் கட்டப்பட்டன. 

கடவுளர்களுக்காக கருவறைகல் போன்ற கூறுகள் குறிப்பிடத்தக்கவை. தஞ்சை பிரகதீஸ்வரம்,கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற  கோயில்கள் சோழர் காலக் கட்டிடக்கலைக்குச் சிறந்த சான்றுகள். இக்கோயில்களில் எல்லாம் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

குன்றங்குடி குடவரைக்கோவில்

ஓவியக் கலைக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகைகள், காஞ்சி கைலாச நாதர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்கள் போன்றவைகளில் மிகச் சிறந்த ஓவியங்கள் உள்ளன. கல்லிலே சிலை வடித்தது போன்று, வெண்கலம்  போன்ற உலோகத்தாலும் சிலைகள் வார்க்கப்பட்டன. சோழர் காலத்திய வெண்கலத்தால் ஆன நடராசர் சிலை, சைவ, வைஷ்ணவ உற்சவ மூர்த்தி சிலைகள், 63 நாயன்மார்களின் சிலைகள் உலக புகழ் பெற்றவையாம். தமிழர்கள் தங்களுக்கென கணிதம், காலவியல், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினர். சங்க இலக்கியங்களில் எண், கணக்கு நாழிகை, யாமம், காதம், கோல் போன்ற அளவைகளும், இலையுதிர், இளவேனில் போன்ற கால கணக்குகளையும் காணலம். ஏலாதி, திரிகடுகம், சிறு பஞ்சமூலம் போன்ற நூல்களில் பெயர்கள் மூலம் அவர்களின் மருத்துவ அறிவை அறியலாம்.


மாமல்லவரம்

கணியன் என்பவர் வானவியல் மற்றும் ஜோதிடவியல் வல்லவராவார். தமிழ் சித்த்ர்கள் சித்த வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தங்கள் ஆய்வுகளையும், சிகிச்சைகளையும், மருந்து தயாரித்தலை பற்றியும் மருந்து தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகள் பற்றியும், தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.

இறுதியாக தமிழர்கள், மனிதச் செயல்பாடுகளின் பல துறைகளிலும் சிறந்து விளங்கினர். அவர்களின் தத்துவம் பேரளாவிய உலகப் பார்வை கொண்டது. அவர்களது இறையியல் மூட நம்பிக்கைகளுக்கு அதிக இடமளிக்கவில்லை. சமண, பௌத்த சமயங்கள் போன்று தமிழர்களும் “தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். மனிதன் தன் விதியை தானே தீர்மானிக்கிறான் என்பதில் தெளிவாக இருந்தான். இந்திய வரலாற்றில் தமிழர்களின் மரபு ஒரு புகழ் வாய்ந்த பகுதியாகும்.

  
சங்க கால வீடு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக